வெள்ளி, 1 மார்ச், 2013

ஓம்

1.. "ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களான அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. 'அ' மற்றும் 'உ' எழுத்துக்கள் சேர்ந்து 'ஓ' என்று ஒலிக்கப்படுகிறது.  முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, "என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.  இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.  ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.  இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.  இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.  இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.  இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.  இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம்.  கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.  கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.  (நன்றி: யோகா குரு திரு. உன்னிகிருஷ்ணன்) 
2.


 அனைத்து ஒலிகளும் பிறப்பதற்க்குண்டான
அடிப்படையே ஓம் எனும் ப்ரணவ மந்திரம் தான்...
ஓம் எனும் ப்ரணவ மந்திரம்...
அ , உ , ம் 
இந்த மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது...


அ , உ , ம்  இந்த மூன்று எழுத்துக்களும்  முறையே
பிரம்மா , சிவன் , விஷ்ணுவை குறிக்கும்..




                     


அ – படைத்தல்

உ – காத்தல்


ம – அழித்தல்



அ என்பது சிவனையும்
உ என்பது உமையவள்
 எனப்படும் சக்தியினையும்,   
 சிவனும் சக்தியும்
இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும்.





அகார, உகார, மகாரம்-- சூரியன் , சந்திரன் , அக்கினியையும் குறிக்கும்


அ -- சூரியன்  ரிக் வேதம்  ரஜோ குணம்  கிரியா சக்தி
உ - சந்திரன்  ய்ஜூர் வேதம்  சத்வ குணம்  இச்சா சக்தி
ம் - அக்கினி  சாம வேதம்  தமோ குணம்  ஞான சக்தி




கணபதியின் முகம் ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தை குறிக்கும்.
கணபதியின் இருகண்கள் ஓ வின் இரு சுழிகளையும்
தும்பிக்கை - ஓவின் இரண்டாம் சுழியிலிருந்து
 மூன்றாம் சுழிக்கு வந்து ம் வரை குறிக்கும் ....


அதனால் தான்
இரு கண்களுக்கு நடுவில்+மூக்கின் ஆரம்பம் ஆக உள்ள இடத்தில்
 நம் கவனத்தை செலுத்தி அதன் உள்ளே இருக்கும் நமது ஆத்மாவிற்கு
 ஓம் எனும் மந்திரம் சொல்லி தியானம் செய்வதன் மூலம்
அந்த ஆதமாவை பலம் பெற செய்யலாம்


நாம் எந்த செயல் செய்தாலும் பிள்ளையார் சுழிப்போட்டு தான் தொடங்குவோம்.. பிள்ளையார் சுழி என்பதே..ஓம் -ஐ குறிக்கும்..
 ஓம் தான் மருவி மருவி...உ வடிவில் போட்டுக்கொண்டிருக்கிறோம்...


ஓலியின் ஆதி ஓம் ...ஓம் வடிவில் முகம் உள்ள விநாயகரை
முதன்மை கடவுளாக வணங்கி விட்டு அடுத்து
ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தின் மகிமையை விளக்கிய
ஓம் முருகரையும் வணங்கிவிட்டு கடவுள்களை வணங்க வேண்டும்...




ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால்
பிரம்மனை சிறையில் அடைத்து..விளக்கம் கேட்ட
சிவபெருமானுக்கு குருவாக அமர்ந்து
முருகர் பொருளை விளக்கினார்..






இதிலிருந்து நாம் இன்னொரு
பாடத்தையும் தெரிந்து கொள்ளலாம்
நமக்கு தெரியாததையும், நல்ல விசயத்தையும் யார் சொன்னாலும்
அவர்களை குருவாக ஏற்று கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும்..




தொடர்ந்து ஓம் எனும் மந்திரம் சொல்லியபடி தியானம் செய்தால்
 உடலில் காந்த ச்க்தி அதிகரிக்கும் - மனசாந்தி ஏற்படும்.



ஓம் எனும் மந்திரத்தில் ஐந்து பூதங்களும் அடங்கும்...
அசரம்(இயங்குதிணை), சரம் (நிலைத்திணை),
 அசரம்+சரம்= சராசரம்(உலகம்) தோன்றியது.


கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான.           பகவத் கீதை (8.13)

ஓம் எனும் ப்ரணவத்திலிருந்து தான் விந்து , விந்துவிலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.








 

படிக்கும் மாணவ , மாணவியருக்கு ..


நமது மனம் மற்றும் எண்ணங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. அதை பலமுறை அனுபவபூர்வமாகவே கவனித்திருக்கலாம்.அப்படி மாற்ற கூடிய சக்தி எப்படி ,எங்கிருந்து வருகிறது? அந்த சூழ்நிலை சக்தியை வெற்றி சக்தியாக , மகிழ்ச்சிக் கனியாக, ஆரோக்கிய வளர்ச்சிகாக   எப்படி மாற்றுவது தான் இந்த  ஒலி , ஒளி  வழி  யோகா ! இது  மிகவும் எளிதான வழி , எல்லா வயதினருக்கும் , எல்லா இனத்தவருக்கும் , எல்லா மததினருக்கும் பொருந்தும் பொதுவானதும்  பிறருக்கு பாதிக்காத வழியும் ஆகும்  !

நமது சூழ்நிலை சுற்றி பலருடைய எண்ண  அலைகள் இருக்கின்றன. அதாவது அது எண்ண  அலைகளாகவும், ஒலி அலைகளாகவும்,   ஒளி  அலைகளாகவும் , காந்த  அலைகளாகவும் பரவி இருக்கின்றன . அதில் எந்த எந்த  சக்தி அதிக பலம் வாய்ந்ததாக இருககின்றதோ அது தான் உன்னை மீகவும் கவரும் அல்லது ஏற்கச்செயும். அது நல்ல அலைகளாக இருந்தால் நன்மையாகவும், கெட்ட  அலைகளாக இருந்தால் கெட்ட  செயலும் உண்டாகும்.அந்த சூழ்நிலையை எப்படி எப்போதும் நல்ல , வெற்றி மற்றும் மகிழ்ச்சி சக்தியாக மாற்றும் வித்தை தான் இந்த  யோகா.

சுருங்க சொல்ல போனால் முன்பு 'மந்திரங்கள் ' சொல்ல கேட்டுயி ருப்பீர்கள். அந்த  'மந்திரங்கள் ' என்றும் வைத்துக்கொள்ளலாம். இந்த  மந்திரத்தின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் (கண்ணை மூடிக்கொண்டு அதாவது  மனப்பாடம் செய்திருந்தால் )   நிறுத்தி நிதானமாய் உச்சரிக்கும் ஒவ்வொரு  தடவையும் சுத்தமான காற்று அலைகள் உங்கள் உடம்பிற்க்குள் புகுகின்றன. சக்திமிக்க மந்திர வார்த்தைகள்  உச்சரிக்கும்போது ஒலி  அலைகள் உங்களை சுற்றி பரவுகின்றன.மனக்கண்ணால் உங்களை நீங்கள் நினைக்கும் போது ஒளி அலைகள் உங்களை சுற்றி பரவுகின்றது. ஆக  இந்த  அலைகள் தான் உங்களுக்கு அறிய பெரிய காரியங்களை செய்யக்கூடிய சக்தியை கொடுக்க காத்திருக்கின்றது. அதை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது அதன் மகிமையை உணருவீர்கள்.


இந்த  மந்திர சொற்கள் உங்கள் ஆழ்மனதில்  புதைந்து இருக்கும் திறமைகளையும், ஐடியாக்களையும் உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல் மூலமாக வெளியே கொண்டு வருவதற்காக உதவி வந்திருக்கும் கோடாளி. இப்படி  தான்  பல துறைகளில் உள்ள சாதனையாளர்கள் பின் பற்றி வருகின்றனர். உங்களுடைய ஒவ்வொருவருடைய வாழ்கை சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகத் தான்  இந்த ஒலி , ஒளி  வழி  யோகா. தினமும் பின்பற்றுங்கள்! மிகச் சிறந்த பலன்கள் பெறுவீர்கள்.   


வாழ்கை முன்னேற்றத்துக்கு ஒரு உந்து சக்தி, ஒரு தூண்டுதல் , ஒரு தன்னம்பிக்கை மிக மிக அவசியம். அந்த  உந்து சக்தி தான் இந்த  மந்திர வரிகள். நாம் பிறர் தயவிலோ பிறருக்காகவோ  காத்திருந்தால் நமது முன்னேற்றம்  தடை படும். அந்த முன்னேற்றதுக்கான சுய ஊக்கி தான் இந்த மந்திரவரிகள்.






அந்த மிந்திர வார்த்தைகள் இதோ ....


முதலில்

 
படித்ததில் பிடித்தது


படிக்கும் மாணவ , மாணவியருக்கு .. 

நான்  எனது  வாழ்கை முன்னேற்றதிக்காக  சிறந்த  இலட்சியங்களை உருவாக்கிக் கொள்வேன்.அதற்காக அறிவு சார்ந்த பல புத்தகங்களை பலவழிகளில் கற்று வெற்றி பெறுவேன். எநநிலையிலும்   கர்வம் கொள்ளாமல் எனது கடமைகளை கண்ணும் கருத்துமாய் செய்வேன். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த  உலகுக்குப் பெருமை சேர்க்கும் விதம நடந்து கொள்வேன்.


என்னுடைய கல்வி அறிவு, திறமை மற்றும் புத்திசாலிதனத்தை ஒருமுகபடுத்தி நான் கொண்ட இலட்சியத்தை அடைந்தே தீருவேன்.


என்னிடம் எண்ணற்ற திறமைகள்,  ஐடியாக்கள் பல இருக்கின்றன,  என் ஆழ  மனம் காட்டும் வழியிலும் அதன் சக்தியிலும் எனக்கு மிக அதிக நம்பிக்கை இருக்கின்றன. என் நிஜமான தேவைகள் கண்டிப்பாக நிறைவேறும். எனக்கு கிட்டாதவற்றை பற்றி கவலை கொள்ளமாட்டேன். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தை   நழுவவிடாமல் நன்றாக பயன்படுத்திக் கொள்வேன்.    


ஒவ்வொரு செயலையும் முனைப்புடன் முயற்சிப்பேன்.'என்னால் முடியாது' என்று ஒருபோதும் கூறமாட்டேன்.வாழ்க்கையை வளப்படுத்தும் அன்பு, செல்வம், சந்தோஷம் ஆகியவற்றை கொண்டு வந்து சேர்க்கும் எண்ணங்களை மட்டுமே நான் சிந்திக்கிறேன்.வெற்றிகளை கொடுக்கும் பல எண்ணங்கள் இந்த  உலகில் நிறைந்திருக்கின்றன.அவைகளை நான் பெற்றுகக் கொண்டிருக்கிறேன்.   



என் அறிவு, என் சக்தி, என் பலம் சுபிட்சமான வாழ்க்கைக்கு என்னை அழைத்துச் செல்லும் பாதை. இந்த  சுபிட்சத்தை என் கண்ணால் காண்கிறேன் அதை அடைவேன் என்று உறுதி கொள்கிறேன்  


குறிப்பு : இதை  தொடர்ந்து தினமும் குறைந்தது ஒருமுறையாவது சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். உங்கள் இலட்சியம் நிறைவேறும்.


-----------------------------------------------------------------------------------------------------------------------


தொழிலில் பல சாதனை செய்ய வேண்டும் என்கிறவர்களுக்கும், நல்ல
************************************************************************** வேலை கிடைக்கவும்,  பதவி உயர்வு மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவும் ,
*********************************************************************************
முன்னேற்றத்திற்காகவும் பொதுவாக எல்லோருக்காகவும்....  
********************************************************************************





என்னிடம் எண்ணற்ற புதுமைகள் படைக்கும்  திறமைகள் இருக்கின்றன, அதிக பலனை தரும் எளிமையான ஐடியாக்கள் இருக்கின்றன, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு போன்ற  மூல பலங்கள் இருக்கின்றன அவற்றை நான்  தெரிந்து வைத்திருக்கிறேன்.அவற்றின் விலை மதிக்கமுடியாத மதிப்பை உணர்ந்திருக்கிறேன். என்  திறமைகளை  பயன்படுத்தும்போதும் பணிகளை செய்யும்போதும் நிச்சயம் பலன் கிடைக்கிறது. செல்வம் சேர்க்கக்கூடிய வாய்ப்புகளும் ஐடியாக்களும் என்னிடம் நிறைய இருக்கின்றன. எனக்கு பிடித்தமான தொழிலை நான் செய்கிறேன். அதன் மூலம் பணம் சேர்ப்பேன்.என் ஆழ்மனம் கூறும் யோசனைகளிலும் அதன் உந்துதல் சக்தியிலும் எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கிறது.


என்  நிஜமான தேவைகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறும் என்று எனக்குத்  தெரியும். ஆகையால் நான் பொறுமை இழக்கவில்லை, கவலைப்படவில்லை, சந்தேகம் கொள்ளவில்லை.


நான் விரும்புவது ஒவ்வொன்றும் முறையான வரிசைப்படி முறையான நேரத்தில் என் வாழ்கையில் கிடைக்கும். இது  இயலாது என்கிற எண்ணம் எதுவுமே எனக்கு கிடையாது. அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் அகியவற்றை கொண்டு வந்து சேர்க்கும் எண்ணங்களை மட்டுமே நான் சிந்திக்கிறேன். அவை தான் என் வாழ்வை வளப்படுத்தும்.


வெற்றிகரமான எண்ணங்கள் இந்த  உலகெங்கும் நிறைந்திருக்கின்றன. அவை இப்போது எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.


பல சக்திகள் இதுவரை பயன்படுத்தாமல் என்னுள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி விரைவாகவும் சுலபமாகவும் என் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளப்போகிறேன்.


நான் சொந்த முயற்சியில் சம்பாதிபேன் . அதை முதலீடு செய்து பன் மடங்கு பெருக்குவேன். ஆக்கப்பூர்வமான  சிந்தனைகள் அலை அலையாய் எனக்குள் பொங்கி எழுகின்றன.


எதிர்பாராத பணம். உதவி மற்றும் சந்தர்ப்பங்கள் பரபரப்பான சூழ்நிலையில் எனக்கு கிடைக்கிறது. பின்னடைவு ஏற்பட்டால் அதுவும் வளர்ச்சிக்கு ஒரு வழி என்று நினைக்கிறேன். பின்னடைவு என்பது மாறு வேடத்தில் வரும் பரிசு தான் என்று நினைக்கிறேன். அதுவே எனது முன்னேற்றத்துக்கு படிக்கல் என்று கருதுகிறேன்.


என் அறிவு, என் சக்தி, என் பலம் எனது இலட்சிய  வாழ்க்கைக்கு என்னை அழைத்துச் செல்லும் பாதை. இந்த  இலட்சியத்தை  என் கண்ணால் காண்கிறேன் அதை அடையும் வரை ஓயாமல் உழைத்து வெற்றி பெறுவேன்  என்று உறுதி கொள்கிறேன்.  
குறிப்பு : இதை  தொடர்ந்து தினமும் குறைந்தது ஒருமுறையாவது சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். உங்கள் இலட்சியம் நிறைவேறும்.